கேள்வி
'ஹயாத்துஸ் ஸஹாபா' என்ற நூல் ஆதாரப்பூர்வமானதா? அதனை வாசிக்கலாமா?
பதில்
பதில்:
'ஹயாத்துஸ் ஸஹாபா' என்ற நூலில் நிறைய இட்டுக்கட்டப்பட்ட, பொய்யான மற்றும் பலவீனமான செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. சிறப்புகளை (பளாயில் / சிறப்பு மாண்புகள்) சொல்வதற்காக ஆதாரமில்லாத செய்திகளைக் கூட சொல்லலாம் என்ற தவறான அடிப்படையில், பல சிந்தனைக்கு ஒவ்வாத, அடிப்படையற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் அதில் இடம்பெற்றுள்ளன.
அந்த நூலில் சரியான செய்திகளும் இருந்தாலும், குர்ஆன் சுன்னாவுக்கு முரணான செய்திகள்தான் அதிகமாக உள்ளன. எனவே, ஒரு பொதுமகன் அந்த நூலை வாசிப்பதைத் தவிர்த்துக் கொள்வது மார்க்க ரீதியாக மிகவும் சிறந்தது.