ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

வஹியை நேர்படச் சிந்திப்பது மற்றும் குதர்க்கமாகச் சிந்திப்பது என்றால் என்ன? (துல்கர்னைன் சம்பவம் போன்றவைகளை எவ்வாறு அணுகு

வஹீ சிந்தனை குதர்க்கம் துல்கர்னைன்

← முந்தையஅடுதது →
கேள்வி
வஹியை நேர்படச் சிந்திப்பது மற்றும் குதர்க்கமாகச் சிந்திப்பது என்றால் என்ன? (துல்கர்னைன் சம்பவம் போன்றவைகளை எவ்வாறு அணுகுவது?)
பதில்
பதில்:

வஹியை நேர்படச் சிந்திப்பது என்பது, "இது அல்லாஹ்வின் வார்த்தை; இதில் எந்த சந்தேகமுமில்லை. எனது புரிதலில் தான் குறைபாடு இருக்கிறது. நான் இதனை நல்ல முறையில் விளங்க முயற்சிப்பேன்" என்று நேர்மையான சிந்தனையோடு அணுகுவதாகும்.

குதர்க்கமாகச் சிந்திப்பது என்பது, தனது பகுத்தறிவை முன்வைத்து வஹியைப் பொய்ப்படுத்தும் நோக்கோடு அல்லது குறை காணும் நோக்கோடு அணுகுவதாகும். அல்லாஹ் குர்ஆன் வசனங்கள் மூலம் நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு நேர்வழியும், தீய எண்ணத்தோடு அணுகுபவர்களுக்கு வழிகேடும் ஏற்படுத்துகிறான்.

உதாரணமாக துல்கர்னைன் போன்ற சம்பவங்களை குர்ஆன் முழுமையான ஊர், பெயர் விவரங்களோடு சொல்லவில்லை. இது முற்காலத்திற்கு மட்டும் அல்ல, எதிர்காலத்திற்குமான ஒரு மெசேஜ் (உதாரணமாக யஃஜூஜ் மஃஜூஜ் வருகை) அதில் பொதிந்துள்ளது. குர்ஆன் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. ஒரு விஷயத்தின் முழுமையான விளக்கம் நமக்குத் தெரியாவிட்டாலும், "இது அல்லாஹ்வின் உண்மையான வார்த்தை" என்று ஏற்றுக்கொள்வதே முஃமினின் பண்பாகும். சந்தேகங்களை இறை வசனத்தோடு மோதுவதற்காகக் கேட்காமல், தெளிவு பெறுவதற்காகப் பணிவோடு கேட்பதே சரியான அணுகுமுறையாகும்.

← முந்தையஅடுதது →