வியாபாரத்தில் Credit Card மெஷினை வைத்து வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவது மார்க்க ரீதியாக ஒரு நிர்ப்பந்தம் அல்ல. அரசாங்கம் "Credit Card மூலம் தான் வியாபாரம் செய்ய வேண்டும்" என்று சட்டமாகக் கட்டாயப்படுத்தாத வரை, வெறுமனே வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்கள் என்பதற்காக நாமாக இதனை ஒரு நிர்ப்பந்தம் என்று கருத முடியாது.
Credit Card மூலம் வாடிக்கையாளர் 10 லட்சத்திற்கு பொருள் வாங்கினால், வங்கி அதனை உங்களுக்கு வரவு வைத்துவிட்டு, அதிலிருந்து 1.5% முதல் 2.5% வரை வட்டியாகக் கழித்துக்கொண்டுதான் உங்களுக்குத் தருகிறது. இதன் மூலம் நீங்கள் வங்கிக்கு வட்டி கட்டுபவராக மாறுகிறீர்கள். மேலும், அந்த வாடிக்கையாளரை கடனாளியாக்கி வட்டி வலையில் வீழ்த்துவதற்கு நாமே காரணமாகவும் அமைகிறோம்.
தரமான பொருளை நேர்மையாக விற்றால் மக்கள் பணம் கொடுத்தும் வாங்கத் தயாராக இருப்பார்கள். எனவே, இதை நிர்ப்பந்தம் என்று கூறி நாமாகவே வட்டிக்குத் துணைபோகும் Credit Card மெஷினைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.