ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

வழிகேட்டில் உள்ளவர்கள் வீதியோரப் பிரச்சாரங்கள் போன்ற சேவைகளை தைரியமாகச் செய்கிறார்களே, அந்த தைரியத்தையும் வீரத்தையும் நா

வழிகேடு வீரம் அறியாமை தஃவா

← முந்தையஅடுதது →
கேள்வி
வழிகேட்டில் உள்ளவர்கள் வீதியோரப் பிரச்சாரங்கள் போன்ற சேவைகளை தைரியமாகச் செய்கிறார்களே, அந்த தைரியத்தையும் வீரத்தையும் நாம் பாராட்டுவதும் ஆதரவு அளிப்பதும் சரியா?
பதில்
பதில்:

குர்ஆன், சுன்னாவிற்கு முரணான தெளிவான வழிகேட்டில் உள்ளவர்களை, அவர்கள் செய்யும் ஏதோ ஒரு சில தைரியமான காரியங்களுக்காகவோ வீரியத்திற்காகவோ பாராட்டுவதும் ஆதரிப்பதும் முற்றிலும் தவறாகும்.

அறியாமையில் உள்ளவர்களிடம் எப்பொழுதும் ஒருவிதமான ஆவேசமும், வீண் துணிச்சலும் இயல்பாகவே இருக்கும். அறிவாளிகளிடம் நிதானமும், எங்கு கோபப்பட வேண்டும், எங்கு பொறுமைகாக்க வேண்டும் என்ற அளவுகோலும் இருக்கும். வழிகெட்டவர்கள் தங்களது அறியாமை ஆவேசத்தை வீரம் என்று அடையாளப்படுத்துவார்கள். இது போன்ற போலியான வீரத்தை நாம் பாராட்டக் கூடாது. சில வேளைகளில், தவறானவர்களைக் கொண்டும் அல்லாஹ் இந்த தீனுக்கு உதவி செய்வான். ஆனால், நாம் அவர்களைப் பாராட்டினால், அவர்களுக்குள் இருக்கக்கூடிய 75 சதவீதமான வழிகேடுகளுக்கும் நாம் அறியாமலேயே ஆதரவு கொடுப்பது போன்றாகிவிடும்.

சைத்தான் ஒரு வழிகேட்டை நேர்வழியில் உள்ளவர்களிடம் நுழைப்பதற்கு இதுபோன்ற "அவர்களின் வீரத்தைப் பார், ஒழுங்கைப் பார்" என்ற நுழைவாயிலைத்தான் பயன்படுத்துவான். எனவே, எந்த வழிகெட்ட கொள்கையுடையவர்களையும் அவர்கள் செய்யும் சில துணிச்சலான செயல்களுக்காகப் பாராட்டுவதை நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

← முந்தையஅடுதது →