ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் வளர்ப்பு மகனின் பணத்தில் கடையை வாங்கி, அதனை வளர்த்தவர் தனது சொந்தப் பெயரில் எழுதி வைத

வளர்ப்பு மகன் சொத்து உரிமை அநீதி தத்தெடுத்தல்

← முந்தையஅடுதது →
கேள்வி
வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் வளர்ப்பு மகனின் பணத்தில் கடையை வாங்கி, அதனை வளர்த்தவர் தனது சொந்தப் பெயரில் எழுதி வைத்துக்கொண்டு, வாடகையையும் அனுபவிப்பது மார்க்க ரீதியாக கூடுமா?
பதில்
பதில்:

மார்க்க ரீதியாக இது ஒரு மிகப்பெரிய அநியாயமும், பெரும் பாவமுமாகும். அனாதைகளுடைய சொத்துக்களை அநியாயமாகச் சாப்பிடுபவர்கள் தங்கள் வயிறுகளில் கொதிக்கக்கூடிய நெருப்பையே சாப்பிடுகிறார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கடுமையாக எச்சரிக்கிறான்.

ஒருவரைத் தத்தெடுத்து வளர்த்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த வளர்ப்பு மகனின் சொத்தில் வளர்த்தவருக்கு எவ்வித உரிமையோ பங்குகளோ இஸ்லாத்தில் கிடையாது. வளர்ப்பு மகன் சுயமாக உழைத்த சொத்து அவருக்கு மட்டுமே சொந்தமானது. எனவே, அவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கிய சொத்தை உடனடியாக அவர் பெயருக்கே மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும். அதிலிருந்து வரும் வாடகையும் அந்த வளர்ப்பு மகனுக்கே சொந்தமானது.

வளர்த்தவர் அந்த கடையில் உழைத்திருந்தால் அதற்கான நியாயமான கூலியை மட்டுமே எடுக்கலாமே தவிர, அந்த சொத்தில் ஒரு பைசா கூட அவருக்குச் சொந்தமில்லை.

← முந்தையஅடுதது →