கேள்வி
வட்டிக்குக் கடன் வாங்கிப் பாதிக்கப்பட்ட ஒருவரின் கடனை அடைக்க ஸகாத் பணத்தைப் பயன்படுத்தலாமா?
பதில்
பதில்:
வட்டி அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் செய்த ஒருவர், தன் தவற்றை முழுமையாக உணர்ந்து தவ்பா செய்து திருந்தி, இனிமேல் வட்டித் தொழிலிலோ கிரெடிட் கார்டு பயன்பாட்டிலோ ஈடுபட மாட்டேன் என்று உறுதியாக இருப்பது நமக்குத் தெரியவந்தால், அவரை அந்தக் கடனிலிருந்து மீட்பதற்காகத் தாராளமாக ஸகாத் பணத்தைப் பயன்படுத்தலாம்.
ஆனால், இந்த ஸகாத் பணத்தைப் பெற்று கடனை அடைத்துவிட்டு, அவர் மீண்டும் வட்டிக்குத்தான் செல்வார் என்ற நிலை இருந்தால், அல்லது முன்கூட்டியே அவர் அப்படி நடந்துகொண்டவர் எனத் தெரிந்திருந்தால், அவர் ஸகாத் பெறத் தகுதியற்றவராவார். அப்படி இல்லாத பட்சத்தில் அவருக்கு ஸகாத் கொடுத்து அவரை வட்டியிலிருந்து விடுவிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே.