மார்க்கப் பற்றுள்ளவர் என்பதற்கும் மார்க்க அறிவுள்ளவர் என்பதற்கும் நேரடி சம்பந்தம் கிடையாது. மார்க்க அறிவைத் தேடுகின்றவர்கள் குர்ஆன், ஹதீஸ், கிதாபுகளைப் படித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் மார்க்கத்தைப் படித்தவர்கள் என்பதற்காகவே அவர்களை 'மார்க்கப் பற்றுள்ளவர்கள்' என்று முடிவு செய்துவிட முடியாது.
மார்க்கத்தைப் படித்தவர் நிச்சயமாகத் தன்னைத்தானே உபதேசம் செய்து மார்க்கப் பற்றுள்ளவராக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், நடைமுறையில் அறிவில்லாத மக்கள் கூட மார்க்கத்தில் பெரிய பற்றோடு வாழ்வதையும், அதேசமயம் மார்க்க அறிவுள்ளவர்கள் தொழுகை, நோன்பு இன்றி சினிமா போன்ற மோசமான வாழ்க்கையோடு வாழ்வதையும் காண்கிறோம்.
எனவே, மார்க்கப் பற்று என்பது ஒருவருடைய வெளிப்படையான, தொடர்ச்சியான மார்க்க செயல்பாடுகளையும், அவரைப் பற்றி சமூகத்தில் மக்கள் சொல்லக்கூடிய நல்ல விஷயங்களையும் வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.