ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கு குடும்ப ரீதியாக தொந்தரவுகளோ அல்லது மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யுமா

பெண்கள் குடும்பத் தொந்தரவு மார்க்கப் பற்று குர்பானி

← முந்தையஅடுதது →
கேள்வி
மார்க்கத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கு குடும்ப ரீதியாக தொந்தரவுகளோ அல்லது மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்யுமாறு நெருக்கடிகளோ ஏற்பட்டால் அவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
பதில்
பதில்:

மற்றவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்ல முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையோ அல்லது நெருக்கடியோ உங்களுக்கு ஏற்பட்டால், உங்களால் முடிந்த அளவுக்கு மனதளவில் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. அல்லாஹ் அந்த விஷயத்தில் உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான்.

சிறப்பான அல்லது சுன்னத்தான விஷயங்களைச் சூழ்நிலை காரணமாக உங்களால் செய்ய முடியாமல் போனால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால், உங்களது கட்டாயக் கடமைகள் (வாஜிபுகள்) மற்றும் தவிர்க்க வேண்டிய பாவங்கள் (ஹராமானவை) விஷயத்தில் எந்த நிலையிலும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் நீங்கள் விட்டுக்கொடுப்போ தெய்வ தாட்சண்யமோ காட்டக் கூடாது.

ஒரு உறுதியற்ற சூழ்நிலையில் வாழ்கின்ற போது நமது உறுதியும் குலைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, இக்கட்டான சூழ்நிலைகளிலும் கடமையை விடுகின்ற நிலைக்கோ, ஹராமானதைச் செய்கின்ற நிலைக்கோ சென்றுவிடாமல் பாதுகாக்கும்படியும், உங்களை உறுதிப்படுத்தும்படியும் அல்லாஹ்விடம் அடிக்கடி துஆ கேட்டுக் கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →