ரசூல் (ஸல்) அவர்கள் தனது மகள் உம்மு குல்சூம் (ரழி) அவர்களை அடக்குகின்ற போது, அன்றைய தினம் தமது மனைவியோடு சேராத, உலகத் தொடர்பு குறைந்து இறைத் தொடர்பு அதிகமுள்ள ஒருவரை (அபூ தல்ஹா அவர்களை) கபரில் இறங்குமாறு கூறினார்கள். இது வாஜிபோ (கட்டாயமோ) அல்லது இதுதான் நிபந்தனையோ அல்ல; மேலும் ஆண்களின் ஜனாஸாவுக்கு இந்த சட்டம் இல்லை. பெண்களை அடக்குகின்ற போது மட்டுமே ரசூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
ஒரு பெண்ணை அடக்குவதற்கு யாரை கபரில் இறக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் முழு உரிமை அவளது வலீக்கு (தந்தை, சகோதரன் அல்லது கணவன்) மட்டுமே உரியதாகும். எனவே, ஒரு தந்தை தன் மகளையோ அல்லது கணவன் தன் மனைவியையோ அடக்குகின்ற போது, மார்க்கப் பற்றுள்ள, இறையச்சம் உள்ள ஒருவரை கபரில் இறக்குமாறு கூறுவது சுன்னத்தாகும்.
அதேபோல, தமது குடும்பத்தாரின் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் ஒரு சூழ்நிலை (தந்தை, கணவன் அல்லது பிள்ளைகளுக்கு) ஏற்படுமானால், நாமும் உலகத் தொடர்புகளைக் குறைத்து மறுமை சிந்தனையோடு இருந்து, நாமே கபரில் இறங்குவதற்கு ஒரு தயார் நிலையில் இருப்பதும் மார்க்கத்தில் சிறந்ததொரு ஏற்பாடாகும்.