ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பெண்கள் கப்ருகளை (மையவாடியை) ஸியாரத் செய்ய முடியுமா?

பெண்கள் கப்ரடி ஸியாரத் ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
பெண்கள் கப்ருகளை (மையவாடியை) ஸியாரத் செய்ய முடியுமா?
பதில்
பதில்:

பெண்கள் கபர்களை ஸியாரத் செய்வதற்கு மார்க்க ரீதியாக எந்தத் தடையும் இல்லை. "நான் உங்களை கபர்களை ஸியாரத்து செய்வதை விட்டும் தடை செய்திருந்தேன்; இனி நீங்கள் அதை ஸியாரத்து செய்யுங்கள், அது உங்களுக்கு மரணத்தை ஞாபகப்படுத்தும்" என்ற ரசூல் (ஸல்) அவர்களின் பொதுவான அனுமதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரியதே. மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் ரசூலுல்லாஹ்விடம், 'நான் கபர்களை ஸியாரத் செய்கின்ற பொழுது எப்படி துஆ கேட்க வேண்டும்?' என்று கேட்டுச் செயல்பட்ட செய்தியும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், "கபர்களை ஸியாரத்து செய்யக்கூடிய பெண்களை ரசூல் (ஸல்) சபித்தார்கள்" என்ற ஒரு ஹதீஸும் வருகிறது. இதனை இஸ்லாமிய அறிஞர்கள், பெண்கள் 'அதிகமாக' கபர்களை ஸியாரத்து செய்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகப் பார்க்கிறார்கள். மேலும் ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வதும் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது (கண்டிப்பான தடையல்ல என்றாலும்). பெண்கள் உலகத்தின் ஒரு கவர்ச்சி என்பதனால், ஆண்களும் பெண்களும் கப்ரடியில் ஒன்றாகக் கூடும் போது மரண சிந்தனையும் ஈர்ப்பும் அங்கு பாதிக்கப்படலாம். எனவே, பெண்கள் குறைவாகச் செல்வதும், ஆண்களும் பெண்களும் கலக்காதவாறு நேரங்களைப் பிரித்துக்கொண்டு செல்வதுமே மிகவும் சிறந்ததாகும். மற்றபடி, பெண்கள் கபர்களை ஸியாரத் செய்வதற்கு மார்க்கத்தில் தடை இல்லை.

← முந்தையஅடுதது →