கேள்வி
புது வீட்டிற்குள் குடிபுகும் பொழுது (நுழைகின்ற பொழுது) மார்க்க ரீதியாகச் செய்ய வேண்டிய பிரத்தியேகமான செயல்பாடுகள் ஏதும் உண்டா?
பதில்
பதில்:
புது வீட்டிற்குள் நுழைகின்ற பொழுது மார்க்க ரீதியான பிரத்தியேகமான செயல்பாடுகள் எதுவுமே கிடையாது. பொதுவாக எந்த ஒரு வீட்டிற்குள் நுழையும் பொழுதும் ஸலாம் கூறி நுழைவது, மற்றும் அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவது ஆகிய பொதுவான சட்டங்களைத் தவிர வேறு எந்தச் சட்டமும் இல்லை.
புது வீடு கட்டிய சந்தோஷத்திற்காக, ஷிர்க் அல்லது பித்அத்தான அணுகுமுறைகள் (உதாரணமாக: மௌலூத் ஓதுவது, சிறப்பு திக்ருகள் செய்வது) இல்லாமல் மக்களுக்கு உணவளிப்பது (விருந்து கொடுப்பது) மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே. மற்றபடி, புது வீட்டிற்குள் நுழையும் போது இன்ன வார்த்தைகளைச் சொல்ல வேண்டும், இன்ன தொழில்களை, தொழுகைகளை நடத்த வேண்டும் என்றெல்லாம் இஸ்லாத்தில் எவ்விதமான வழிகாட்டலும் கிடையாது.