ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பிரயாணியின் துஆ அங்கீகரிக்கப்படும் என்று ரியாளுஸ் ஸாலிஹீனில் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

துஆ பிரயாணி ஹதீஸ் தரம் அநீதி இழைக்கப்பட்டவர்

← முந்தையஅடுதது →
கேள்வி
பிரயாணியின் துஆ அங்கீகரிக்கப்படும் என்று ரியாளுஸ் ஸாலிஹீனில் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?
பதில்
பதில்:

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாக ரியாளுஸ் ஸாலிஹீன், திர்மிதி, அபூதாவூத், தயாலிஸி, முஸ்னத் அஹ்மத் போன்ற பல கிரந்தங்களில், "அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ, பிரயாணியின் துஆ, தந்தை தன் பிள்ளைக்காகக் கேட்கும் துஆ ஆகிய மூன்றும் மறுக்கப்பட மாட்டாது" என்ற ஒரு செய்தி வருகிறது. ஆனால் இந்த ஹதீஸ் பலவீனமான (ழயீஃப்) செய்தியாகும்.

இந்த ஹதீஸில் சொல்லப்படும் அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ அங்கீகரிக்கப்படும் என்பதற்கு வேறு பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் பிரயாணியின் துஆ அங்கீகரிக்கப்படும் என்பதற்கோ, தந்தை பிள்ளைக்குக் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்பதற்கோ நேரடியான ஆதாரப்பூர்வமான எந்த செய்திகளையும் காண முடியவில்லை.

இந்தக் குறிப்பிட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் 'அபூ ஜாஃபர் அல் அன்சாரி முஅத்தின்' என்று சொல்லக்கூடிய ஒருவர் வருகிறார். இவரைப் பற்றிய நம்பகத்தன்மை ஹதீஸ் கலையில் அறியப்படவில்லை என்பதால், இது பலவீனமான ஹதீஸ் ஆகும். இதை பலப்படுத்தக்கூடிய வேறு துணை ஆதாரங்களும் இல்லாததால், பிரயாணியின் துஆ அங்கீகரிக்கப்படும் என்ற இந்தச் செய்தி பலவீனமானதே ஆகும்.

← முந்தையஅடுதது →