கேள்வி
பல பெண்கள் கூட்டாகப் பிரயாணம் செய்கின்ற பொழுது, ஒரு பெண்ணுடைய கணவர் மாத்திரம் அங்கே இருந்தால் அவர் ஏனைய பெண்களுக்கும் மஹரமாகக் கருதப்படுவாரா?
பதில்
பதில்:
ஒரு பெண்ணுடைய மஹரம் இன்னொரு பெண்ணுக்கு ஒருபோதும் மஹரமாக மாறமாட்டார். சஃபர் (தூரப் பிரயாண) எல்லையைத் தாண்டி பெண்கள் பிரயாணம் செல்வதாக இருந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனியாக மஹரம் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஒருவருடைய மஹரம் மாத்திரம் கூட்டத்தில் இருக்கும் ஏனைய பெண்களுக்கும் போதுமானது என்பதற்கு இஸ்லாமிய ஷரீஅத்தில் எந்தவிதமான அடிப்படையும் கிடையாது; இது முற்றிலும் தவறான ஒரு நிலைப்பாடாகும்.