ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பயணம் (பிரயாணம்) சென்று ஊருக்குத் திரும்பிய பின்னர், விடுபட்ட தொழுகைகளைச் சேர்த்து, சுருக்கித் தொழலாமா?

பிரயாணம் கஸர் ஜம்உ தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
பயணம் (பிரயாணம்) சென்று ஊருக்குத் திரும்பிய பின்னர், விடுபட்ட தொழுகைகளைச் சேர்த்து, சுருக்கித் தொழலாமா?
பதில்
பதில்:

பிரயாணம் முடிந்து தனது ஊரை வந்து அடைந்த பின்னர் ஒருவருக்குத் தொழுகைகளைச் சுருக்கித் தொழுவதற்கு (கஸர் செய்ய) மார்க்கத்தில் அனுமதி கிடையாது. கஸர் (சுருக்கித் தொழுவது) என்பது பிரயாணத்தில் இருப்பவருக்கு மட்டுமே உள்ள சலுகையாகும்.

ஆனால், ஊருக்கு வந்து சேர்ந்த பின்பும், பிரயாணக் களைப்பு அல்லது வேறு கட்டாய தேவைகள் காரணமாக மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு (ஜம்உ செய்வதற்கு) அனுமதியுள்ளது. சுருக்கமாக, ஊர் திரும்பிய பின் ஜம்உ (சேர்த்து) தொழலாமே தவிர, கஸர் (சுருக்கி) தொழ முடியாது.

← முந்தையஅடுதது →