ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பிறை கண்டதாக ஒரு பிரயாணக் கூட்டம் வந்து சாட்சி சொன்னபோது, நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு சொன்னது அந்த பிரயாணிகளுக்கு

பிறை பிரயாணிகள் நோன்பு ஹதீஸ் தரம்

← முந்தையஅடுதது →
கேள்வி
பிறை கண்டதாக ஒரு பிரயாணக் கூட்டம் வந்து சாட்சி சொன்னபோது, நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு சொன்னது அந்த பிரயாணிகளுக்கு மட்டுமா அல்லது மதீனாவில் உள்ள அனைத்து மக்களுக்குமா? இந்த ஹதீஸின் தரம் என்ன?
பதில்
பதில்:

ஒரு பிரயாணக் கூட்டம் வந்து, "நாங்கள் நேற்று மாலை பிறை கண்டோம்" என்று நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி சொன்னபோது, நபி (ஸல்) அவர்கள் அன்றைய நோன்பை விட்டுவிட்டு, அடுத்த நாள் பெருநாள் திடலுக்கு வருமாறு பணித்தார்கள் என்ற செய்தி சில கிரந்தங்களில் வருகிறது.

மொழி ரீதியாகப் பார்த்தால், அந்தச் செய்தி பிறைச் சாட்சியை ஏற்றுக்கொண்ட மதீனா மக்கள் அனைவருக்கும் சொல்லப்பட்ட பொதுவான கட்டளைதான். அவர்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்திருந்தால் "நீங்கள் ஊருக்குப் போய் நாளை தொழுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் சாட்சி சொல்லவே வந்தார்கள்; அதன்பின் மக்களை நோன்பை விடவும் பெருநாளைக் கொண்டாடவும் நபியவர்கள் ஏவினார்கள் என்றுதான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா (ஸஹீஹா) என்று பார்த்தால், இது முற்றிலும் ஒரு பலவீனமான (ழயீஃப்) செய்தியாகும். இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் 'அபூ உமைர் இப்னு அனஸ் இப்னு மாலிக்' என்பவர் மஜ்ஹூலானவர் (நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாதவர்). இமாம் இப்னு ஸஅத், இமாம் இப்னு ஹிப்பான் ஆகிய இருவர் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்; ஆனால் அவர்கள் இருவரும் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் மிதப்போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் ஆவர். இமாம் இப்னு அப்துல் பர் போன்ற சிறந்த ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை 'அறியப்படாதவர்' என்றே கூறுகின்றனர். எனவே, இது பலவீனமான, ஆதாரமற்ற செய்தி என்பதே ஹதீஸ்கலை ரீதியான சரியான முடிவாகும்.

← முந்தையஅடுதது →