இந்த ஹதீஸை வைத்து நாமாக இறந்தவர்களுக்கு உழ்ஹிய்யா கொடுக்க முடியாது. இந்த ஹதீஸிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையான சட்டம் என்னவென்றால்:
முதலாவது, ஒருவருக்கு உழ்ஹிய்யா கொடுக்கும் பொறுப்பு யார் மீது கடமையாக இருக்கிறதோ (தன்னுடைய பொறுப்பில் உள்ள குடும்பத்தினர்), அவர்களுக்குப் பதிலாக அவர் உழ்ஹிய்யா கொடுக்கலாம். எனக்குப் பொறுப்பற்றவர்களுக்கோ அல்லது இறந்தவர்களுக்கோ கொடுக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை.
இரண்டாவது, ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முழு உம்மத்துக்கும் பொறுப்பானவர்கள். எனவே, அவர்கள் விரும்பித் தமது உம்மத்தில் கொடுக்க இயலாதவர்களுக்காகக் கொடுத்தார்கள்.
மூன்றாவது, ரசூல் (ஸல்) அவர்கள் கொடுத்தது உயிரோடு உள்ளவர்களுக்காகவே தவிர, இறந்தவர்களுக்குக் கொடுத்தார்கள் என்று அந்த ஹதீஸில் எந்தச் செய்தியும் இல்லை.
நான்காவது, ரசூல் (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவைச் செய்தார்கள் என்றால் அதனை உழ்ஹிய்யாவோடு முடித்துக்கொள்ள வேண்டும். அதை வேறு இபாதத்துகளுக்கு ஆதாரமாகக் கொண்டு செல்லக் கூடாது. அதற்குத் தனியான ஆதாரம் தேவை. எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி இறந்தவர்களுக்கு நாமாகவே குர்பானி கொடுக்கலாம் என்று வாதிடுவது எந்த வகையிலும் பொருத்தமற்றதும் தவறானதும் ஆகும்.