"நான் ஒருவரிடத்திலே ஞாபகப்படுத்தப்பட்டு அவர் என் மீது ஸலவாத்து சொல்லவில்லை என்றால் அவர் நாசமடையட்டும்" என்று ரசூல் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ஒரு மஜ்லிஸில் (உதாரணமாக ஒரு பயானில்) ஒருமுறை ரசூல் (ஸல்) அவர்கள் ஞாபகப்படுத்தப்படும் போது ஒருவர் "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று சொல்லிவிட்டார் என்றால், அதன் பிறகு அந்த உரை முழுவதுமே ரசூலுல்லாஹ்வைப் பற்றியதாக இருந்து, திரும்பத் திரும்ப அவர்கள் பெயர் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு முறைக்கும் ஸலவாத் சொல்ல வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒருமுறை சொல்லிவிட்டாலே அந்த மஜ்லிஸைப் பொறுத்தவரை அந்த எச்சரிக்கையிலிருந்து அவர் தப்பிவிடுவார்.
ஆனால், அந்த மஜ்லிஸ் முடிந்து வேறு ஒரு மஜ்லிஸிற்குச் சென்றால் அங்கு மீண்டும் சொல்ல வேண்டும். எனவே, பெயர் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் ஸலவாத் சொல்லியே ஆக வேண்டும் என்று அந்த ஹதீஸ் குறிக்கவில்லை. எனினும், ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தை அதிகரித்துக் கொள்வது நிறைய நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பதனால், திரும்பத் திரும்பச் சொல்வது மிகவும் விரும்பத்தக்கதாகும்.