ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தொழும்பொழுது நாம் சொல்லும் ஒவ்வொரு வசனத்தின் கருத்துக்களையும் நாங்கள் ஞாபகப்படுத்திதான் தொழ வேண்டுமா? அல்லது முறையாக உச்

தொழுகை குர்ஆன் கருத்து விளங்குதல் தஜ்வீத்

← முந்தையஅடுதது →
கேள்வி
தொழும்பொழுது நாம் சொல்லும் ஒவ்வொரு வசனத்தின் கருத்துக்களையும் நாங்கள் ஞாபகப்படுத்திதான் தொழ வேண்டுமா? அல்லது முறையாக உச்சரித்து தொழுதால் போதுமா?
பதில்
பதில்:

தொழுகையைப் பொறுத்தவரைக்கும், எங்களது ஆற்றல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவுதான் எங்களிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அரபு மொழியுடைய அறிவோடு இருந்து கருத்துக்களை விளங்கி உணரக்கூடிய ஒருவராக இருந்தால், அவர் குர்ஆன் ஓதப்படுகிற நேரத்தில் அதற்கு செவிமடுத்து அந்த கருத்துக்களை உள்வாங்க வேண்டும்.

ஆனால், ஒருவருக்கு சிறந்த முறையில் தஜ்வீதோடு உச்சரித்து ஓத முடியும் ஆனால் கருத்து விளங்காது என்றால், அது அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு சிறந்த முறையில் உச்சரித்து ஓத முடியாது, ஆனால் சாதாரணமாக குர்ஆனை ஓத முடியும் என்றால் அது அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அல்லாஹுத்தஆலா எந்தவொரு ஆத்மாவுடைய சக்திக்கு மேலும் கஷ்டப்படுத்த மாட்டான் என்ற அடிப்படையில், எந்த அளவுக்கு கருத்து விளங்க முடியுமோ அவர்கள் கருத்தை உள்வாங்கி ஓத வேண்டும்; அப்படி இல்லாதவர்கள் தங்களால் முடிந்த சிறந்த முறையில் ஓத வேண்டும்.

தொழுகையில் குர்ஆன் வசனங்களின் கருத்தை கட்டாயம் விளங்கினால் தான் அந்தத் தொழுகை கூடும் என்ற நிபந்தனை (ஷர்த்து) கிடையாது. குர்ஆன் ஓதப்பட வேண்டும், அதை நாங்கள் செவிமடுக்க வேண்டும் என்பதுதான் தொழுகையில் எதிர்பார்க்கப்படுகின்ற சட்டம். அதே நேரம், குர்ஆனைப் படிக்க வேண்டும், அதன் மொழிபெயர்ப்பைப் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மிடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.

← முந்தையஅடுதது →