ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஒரு மணி நேரம் பிரயாணம் செய்கின்ற பொழுது அதற்கிடையில் அடுத்த தொழுகை வந்தால் ஜம்உ செய்து தொழலாமா? தொழுகையை எப்போது ஒருவர்

ஜம்உ தொழுகை பிரயாணம் நிர்ப்பந்தம்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஒரு மணி நேரம் பிரயாணம் செய்கின்ற பொழுது அதற்கிடையில் அடுத்த தொழுகை வந்தால் ஜம்உ செய்து தொழலாமா? தொழுகையை எப்போது ஒருவர் ஜம்உ செய்து தொழலாம்?
பதில்
பதில்:

ஜம்உ (சேர்த்துத் தொழுதல்) செய்வதைப் பொறுத்தவரைக்கும், நாம் ஒரு பிரயாணத்தில் இருக்கிறோம் அல்லது ஒரு அவசரத் தேவையில் இருக்கிறோம் என்றால், அதாவது நமக்கு அடுத்த தொழுகை மிஸ் ஆகக்கூடிய (தவறிவிடக்கூடிய) நிலைமை இருக்கிறது என்று சொன்னால் தாராளமாக ஜம்உ செய்து கொள்ளலாம். இதற்காக பிரயாணத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஊரில் ஒரு கட்டாயத் தேவையில் இருந்தாலும் ஜம்உ செய்யலாம்.

உதாரணமாக, ஒரு நபர் நோயில் இருக்கிறார், அல்லது மிக பிரதானமான ஒரு வேலையில் இருக்கிறார், தொழுகைக்கு வர முடியாத ஒரு நிர்ப்பந்தமான சூழ்நிலை அவருக்கு இருக்கிறது (உதாரணமாக ஆபரேஷன் தியேட்டரில் இருக்கக்கூடிய ஒரு டாக்டர்), அல்லது ஒரு நோயாளியை விசாரிக்கச் செல்கிறார் அங்கே தொழுவதற்கு இடமில்லை, திரும்பி வருவதற்கு இடையில் தொழுகை தவறிவிடும் என்ற நிலை இருந்தால், அவர் போவதற்கு முன்னால் ஜம்உ செய்துவிட்டுப் போகலாம்.

இந்த அடிப்படையில் உங்கள் கேள்வியைப் பார்க்கிற நேரத்தில், நீங்கள் ஒரு மணி நேரம் பிரயாணம் போகும் நேரத்தில், உங்களுக்கு அந்தத் தொழுகை கழாவாகும் என்ற நிலை இருந்தால், நீங்கள் முன்கூட்டியே ஜம்உ செய்து கொள்ளலாம். அல்லது அங்கே சென்று ஜம்உ செய்து கொள்வதற்கான நிய்யத்தை வைத்துக் கொள்ளலாம்.

← முந்தையஅடுதது →