கேள்வி
தொழுது கொண்டிருக்கின்ற பொழுது காற்றுப் பிரிவது போன்று உணர்ந்தால் அதனை அடக்கிக்கொண்டு தொழ முடியுமா? அவ்வாறு தொழுதால் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா?
பதில்
பதில்:
வுழு முறியும் நிலை வராத வரைக்கும் நாம் எந்த அடிப்படையில் தொழுதாலும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்; அதில் சந்தேகம் கிடையாது.
ஆனால், தொழுகைக்குள் நுழைவதற்கு முன்னால் மலம், சலம் ஆகியவற்றை அடக்கிக்கொண்டு தொழச் செல்லக் கூடாது என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால், அது தொழுகையின் இக்லாஸைப் பாதிக்கும்; தொழுகையில் வேறு சிந்தனைகளை ஏற்படுத்தும்.
எனினும், தொழுது கொண்டிருக்கிற நேரத்தில் ஒருவருக்கு காற்றுப் பிரிகின்ற சந்தர்ப்பம் ஏற்படுகிற போது, அதை அவர் அடக்கிக் கொண்டு தொழுவாராக இருந்தால் அவரது தொழுகை கூடும். அதில் எவ்விதத் தவறும் கிடையாது.