ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தேசியக் கொடி ஏற்றுதல், தேசிய கீதம் பாடுதல் மற்றும் சுதந்திர தினம் போன்ற தேசியம் சார்ந்த விஷயங்களில் இஸ்லாத்தின் நிலைப்பா

தேசிய கொடி தேசிய கீதம் சுதந்திர தினம் தேசியம்

← முந்தையஅடுதது →
கேள்வி
தேசியக் கொடி ஏற்றுதல், தேசிய கீதம் பாடுதல் மற்றும் சுதந்திர தினம் போன்ற தேசியம் சார்ந்த விஷயங்களில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? பள்ளிவாயல்களில் தேசியக் கொடி ஏற்றலாமா?
பதில்
பதில்:

ஒரு நாட்டைத் தனது நாடு என ஏற்றுக்கொள்வதோ, அந்த நாட்டுக்கென ஒரு கொடி இருப்பதோ, சுதந்திர தினம் போன்ற தினங்களை விடுமுறை நாளாகவோ அல்லது வரலாற்று நிகழ்வாகவோ கருதுவதோ மார்க்க ரீதியாகத் தவறில்லை. இஸ்லாமிய வரலாற்றிலும் கோத்திரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் என தனிக் கொடிகள் இருந்தன.

ஆனால், இந்த தேசியம் என்பது ஒரு 'வெறியாக' மாறி, மார்க்கத்தை விட மேலோங்குவதையும், தேசியத்தை வணங்கக் கூடிய அளவிற்குக் கொண்டு செல்வதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. உதாரணமாக, தேசியக் கொடிக்குச் சிரம் பணிவது, கொடியை முத்தமிடுவது, மற்றும் தேசிய கீதங்களில் மண்ணை வணங்குவது, நாட்டைப் பெற்ற தாயாகவோ கடவுளாகவோ போற்றிப் பாடுவது போன்ற ஷிர்க்கான (இணைவைப்பு) வாசகங்கள் இருந்தால் அதனை முஸ்லிம்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மனிதர்களைப் பிரிக்கவும், இஸ்லாமியப் பற்றை நீக்கவும் இந்தத் தேசியம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பள்ளிவாயல்களில் தேசியக் கொடி ஏற்றுதல்:
பள்ளிவாயல்கள் இபாதத், கல்வி மற்றும் நீதிக்கான ஆன்மீக இடங்களே தவிர, உலகளாவிய அரசியல் அடையாளங்களைக் காட்டும் இடங்கள் அல்ல. காணாமல் போன பொருளைப் பள்ளியில் அறிவிப்பதையே நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்; அதற்கே பள்ளிவாயலைப் பயன்படுத்தக் கூடாது. எனவே, எந்தவொரு அதிகாரபூர்வமான நிர்ப்பந்தமும் இல்லாத நிலையில், நாமாகவே பள்ளிவாயல்களில் தேசியக் கொடியை ஏற்றி ஒரு தவறான வழமையைப் பிற்காலச் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாது. நாளைக்கு இது கட்டாயமாக்கப்பட்டால் அது சமுதாயத்திற்குப் பெரும் நெருக்கடியாக மாறிவிடும். தேசிய உணர்வைக் காட்டுவதற்கு வேறு எத்தனையோ ஆகுமான வழிகள் உள்ளன.

← முந்தையஅடுதது →