கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் நோயாளிகள் மற்றும் பிரயாணிகளுக்கான சட்டத்தின் கீழேயே வருவார்கள். எனவே, அவர்கள் நோன்பை விட்டுவிட்டுப் பின்னர் அதைக் கட்டாயம் கழா (மீட்டல்) செய்ய வேண்டும். ஃபிய்தியா கொடுத்தால் போதும் என்ற கருத்தும் சில அறிஞர்களிடம் இருந்தாலும், கழா செய்வதே மிகச் சரியானதும் ஏற்றமானதுமான நிலைப்பாடாகும்.
சில பெண்கள் "தொடர்ந்து கர்ப்பம், பாலூட்டுதல் என்று பல வருடங்கள் சென்றால் நிறைய நோன்புகள் சேர்ந்துவிடுமே" என்று நினைக்கிறார்கள். உண்மையில் 10, 20 வருடங்கள் தொடர்ந்து அப்படி இருக்கப்போவதில்லை. இடையில் கிடைக்கும் மாதங்களில் (உதாரணமாக ஒரு மாதத்திற்கு மூன்று நோன்புகள் வீதம்) அவர்கள் மெதுவாகப் பிடித்து கழா செய்துவிட முடியும். நோன்பு பிடிக்கவே முடியாத நிரந்தர நோயாளிகள் அல்லது முதியவர்கள் மட்டுமே ஃபிய்தியா கொடுக்க வேண்டும். இவர்களுக்கு நோன்பு நோற்கும் சக்தி பிற்காலத்தில் கிடைக்கும் என்பதால் அவர்கள் கழா செய்வதே கட்டாயமாகும்.