ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதிலோ, சுமந்து செல்வதிலோ அல்லது அடக்குவதிலோ ஏதாவது நன்மைகள் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளதா?

மரணம் நன்மைகள் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதிலோ, சுமந்து செல்வதிலோ அல்லது அடக்குவதிலோ ஏதாவது நன்மைகள் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளதா?
பதில்
பதில்:

ஆம், முஸ்ததரகல் ஹாகிமில் வரக்கூடிய ஒரு செய்தியில் (1307-வது இலக்கம்) அபூராஃபி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது ஹஸன் தரத்திலான ஒரு அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட அருமையான செய்தியாகும்.

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் ஒரு ஜனாஸாவைக் குளிப்பாட்டுகிறாரோ, பின்னர் அந்த ஜனாஸாவில் உள்ள குறைகளை மறைத்து விடுகிறாரோ, அவருக்கு அல்லாஹுத்தஆலா 40 முறை அவரது பாவங்களை மன்னிக்கிறான். யார் ஒரு மையத்தை கபனிடுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்துடைய பட்டுக்களை அல்லாஹுத்தஆலா அணிவிப்பான். யார் ஒரு மையத்துக்காக கப்ரைக் தோண்டுகிறாரோ, அதில் அவரை முழுமையாக அடக்கம் செய்து விடுகிறாரோ, அவருக்கு மறுமை நாள் வரைக்கும் ஒருவரை வசதியோடு ஒரு வீட்டில் வாழ வைத்த கூலி (சதக்கத்துல் ஜாரியாவாக) வந்து கொண்டே இருக்கும்."

ஜனாஸா விஷயத்திலே கலந்து கொள்ளக்கூடியவர்களுக்கு ஆர்வமூட்டி ரசூல் (ஸல்) அவர்கள் சொன்ன பிரதானமான நன்மைகள் இவையாகும். இதில் குறிப்பாக 40 முறை பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற செய்தி மிகவும் சிறப்பான ஒரு நன்மையாகும்.

← முந்தையஅடுதது →