ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா? எரித்துத் தரும் வரைக்கும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கலாமா?

மரணம் சாம்பல் அடக்கம் செய்தல் உரிமைப் போராட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
எரிக்கப்பட்ட ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா? எரித்துத் தரும் வரைக்கும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கலாமா?
பதில்
பதில்:

ஒரு ஜனாஸா என்று கிடைத்துவிட்டால் அதை அடக்குவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். ஒரு முஸ்லிமின் உடல் எரிந்து சாம்பலாக இருந்தாலும், ஒரு முடி அல்லது ஒரு எலும்பு கிடைத்தாலும் அதனை எடுத்து அடக்கம் செய்வது மார்க்க மற்றும் மனிதாபிமானக் கடமையாகும். அந்த சாம்பலுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படவில்லை என்று தெரிந்தால், தொழுகை நடத்திவிட்டு அதனை அடக்கம் செய்ய வேண்டும்.

ஆனால், இந்த விவகாரம் வெறும் ஃபிக்ஹ் (மார்க்கச் சட்ட) ரீதியான பிரச்சினை மட்டுமல்ல. "நான் உனக்கு எரித்துத் தருகிறேன், நீ வெயிட் பண்ணு" என்று சொல்வதை ஏற்றுக்கொண்டு ஒரு முஃமினுடைய சாம்பலை எரித்துத் தரும் வரைக்கும் காத்திருக்கலாமா? அல்லது இறுதி வரைக்கும் எங்களது உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுவதா? என்பதே இங்குள்ள உண்மையான கேள்வி.

எங்களுக்குச் சாம்பல் வேண்டாம், பிரேதம்தான் வேண்டும் என்று சொல்வது நமது உரிமைப் போராட்டத்தின் ஒரு வழியாகும். சாம்பலை வாங்குவது என்பது பிரேதத்தை வாங்கத் தேவையில்லை என்பதற்கான ஒரு மறைமுகமான அங்கீகாரத்தை நாமே கொடுத்துவிடுவதாக ஆகிவிடும். சட்டரீதியாகவோ, WHO அமைப்போ இதில் எவ்விதத் தடையையும் விதிக்காதபோது, எங்களது சடலத்தை எரிக்கக் கூடாது என்று உரிமையோடு நிற்க வேண்டும். மார்க்க ரீதியாக எது கிடைத்தாலும் அடக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், நமது உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு சாம்பலுக்காகக் காத்திருக்கக் கூடாது.

← முந்தையஅடுதது →