ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது பெற்றோரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள முடியவில்லை. ஊருக்குச் சென்ற பிறகு கப்ரடியில

ஜனாஸா தொழுகை மரணம் கப்ரு தொழுகை கழா

← முந்தையஅடுதது →
கேள்வி
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது பெற்றோரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள முடியவில்லை. ஊருக்குச் சென்ற பிறகு கப்ரடியில் (மையவாடியில்) ஜனாஸா தொழுகை தொழ முடியுமா?
பதில்
பதில்:

ஆம், தாராளமாக அவர் தொழலாம். அவர் ஜனாஸாத் தொழுகை தொழக் கிடைக்காமல், அந்த கப்ரு இருக்கிற காலகட்டத்துக்குள்ளேயே (அதாவது அந்த கபரில் இன்னொரு கபரை அடக்கி மாறாத காலகட்டத்துக்குள்ளேயே) ஊருக்குப் போகிறார் என்றால், அந்த ஜனாஸா அடக்கப்பட்ட இடத்திற்குப் போய் அவர் அந்த இடத்தில் ஜனாஸாத் தொழுகை தொழலாம்.

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள், சஹாபாக்களால் தொழுது முடிக்கப்பட்டு அடக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு கப்ரடியிலேயே தொழுகை நடத்தியிருக்கிறார்கள். எனவே, ஒரே ஜனாஸாவுக்குத் தொழாதவர்கள் மறுபடியும் தொழலாம், அதில் எந்தவிதமான பிழையும் இல்லை.

← முந்தையஅடுதது →