கேள்வி
'சூரத்துல் வாக்கியா' ஓதினால் வறுமை நீங்கும் என்று சொல்லப்படுவது சரியா? ஒவ்வொரு சூராவுக்கும் இதுபோன்று கூறப்படும் சிறப்புகளின் மார்க்க நிலைப்பாடு என்ன?
பதில்
பதில்:
சூரத்துல் வாக்கியா ஓதினால் வறுமை நீங்கும் என்பது, மற்றும் சூரத்துல் ஜின்னை 40 முறை ஓதினால் ஜின்னைக் காணலாம் என்பது போன்ற செய்திகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட அல்லது மிகப்பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். இவற்றுக்கு மார்க்கத்தில் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.
ரசூல் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய சூரத்துல் இக்லாஸ், ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் பகரா, சூரா ஆலு இம்ரான், சூரா கஹ்ஃப், மற்றும் பகராவின் இறுதி வசனங்கள் போன்ற சில குறிப்பிட்ட சூராக்களுக்கும் வசனங்களுக்கும் தவிர, வேறு எந்த சூராக்களுக்கும் இது போன்ற பிரத்தியேகமான உலகியல் பலன்களை ரசூல் (ஸல்) அவர்கள் ஆதாரப்பூர்வமாக எங்கும் சொல்லவில்லை.