ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

சுன்னத் தொழுது கொண்டிருக்கும் போது ஃபர்ளு தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் அந்த சுன்னத் தொழுகையைத் தொடரலாமா அல்லத

இகாமத் சுன்னத் தொழுகை தொழுகை ஃபர்ளு

← முந்தையஅடுதது →
கேள்வி
சுன்னத் தொழுது கொண்டிருக்கும் போது ஃபர்ளு தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் அந்த சுன்னத் தொழுகையைத் தொடரலாமா அல்லது முறித்துவிட்டு ஜமாஅத்தில் இணைய வேண்டுமா?
பதில்
பதில்:

இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் கடமையான (ஃபர்ளு) தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையும் இல்லை என்று ரசூல் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இது புதிதாக சுன்னத் தொழுகையை ஆரம்பிப்பதையும் குறிக்கும், ஏற்கனவே தொழுது கொண்டிருப்பதையும் குறிக்கும்.

ரசூல் (ஸல்) அவர்கள் இகாமத் சொல்லப்பட்ட பின்னால் ஒருவர் தொழுது கொண்டிருப்பதைக் கண்டு "ஒரே நேரத்தில் இரண்டு தொழுகையா?" என்று கண்டித்துள்ளார்கள். எனவே, இகாமத் சொல்லப்பட்டுவிட்டால், இமாம் தக்பீர் கட்டுவதற்கு முன்னால் அந்த சுன்னத் தொழுகையை அவசரமாக ஸலாம் கொடுத்து முடிக்க முடியுமாக இருந்தால் முடித்துக் கொள்ளலாம். இல்லையென்றால், அத்தோடு அந்தத் தொழுகையை முறித்துவிட்டு உடனே சென்று ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →