கேள்வி
தொழுகையில் சுத்ரா (தடுப்பு) வைப்பது கட்டாயமா?
பதில்
பதில்:
தொழுகையில் சுத்ரா வைப்பது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு கடமையாகும். "சுத்ரா இல்லாமல் தொழ வேண்டாம்" என்று ரசூல் (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களில் கட்டளையிட்டுள்ளார்கள்.
சுத்ரா இல்லாமல் தொழுதால் தொழுகை முற்றுமுழுதாகப் பாத்திலாகிவிடும் (கூடாமற்போய்விடும்) என்று அர்த்தமல்ல. ஆனால், சுத்ரா இல்லாமல் தொழும்போது குறுக்கே யாராவது கடந்து சென்றால் தொழுகை பாத்திலாவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரு மனிதனையோ, சுவரையோ அல்லது வேறு ஒரு பொருளையோ சுத்ராவாக (தடுப்பாக) வைத்துத் தொழுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும்.