ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

கடன் இருக்கும் பொழுது உம்ரா செல்லலாமா?

வட்டி ஹஜ் கடமை சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
கடன் இருக்கும் பொழுது உம்ரா செல்லலாமா?
பதில்
பதில்:

கடனைப் பொறுத்தவரைக்கும் அதனை இரண்டு விதமாக நாம் நோக்க வேண்டும்:

1. தவணை முடிவடைந்த/கட்ட வேண்டிய கடன்:
நாம் உம்ராவுக்காக ஒரு லட்சம் சேர்த்திருக்கிறோம், ஆனால் நமக்கு 50,000 ரூபாய் உடனடியாக அடைக்க வேண்டிய கட்டாயக் கடன் இருக்கிறது என்றால், கட்டாயம் அந்தக் கடனைத்தான் முதலில் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வுடைய கடமைகளைச் செய்வதற்கு முன்பாக, அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கடனை அடைப்பதே ஃபர்ஸ்ட்.

2. நீண்ட காலத் தவணைக் கடன் (Long-term):
ஒருவர் வியாபாரத்திற்காக எடுத்த கடன், அல்லது நீண்ட காலத் தவணையில் கட்ட வேண்டிய கடன், உடனடியாக திருப்பிச் செலுத்த எந்த நிர்ப்பந்தமும் இல்லாத கடன் அவருக்கு இருக்கிறது என்றால், அந்த நேரத்தில் அவர் உம்ராவோ அல்லது ஹஜ்ஜோ செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. இது ஸகாத்துக்கும் பொருந்தும். உடனடியாகக் கொடுக்க வேண்டிய நெருக்கடி இல்லாத நீண்ட காலக் கடன் இருப்பவர்கள் தாராளமாக உம்ரா செல்லலாம்.

← முந்தையஅடுதது →