கடலில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஹலால் என்று இஸ்லாம் சொல்வதை, மனிதன் அன்றாடம் உண்ணக்கூடிய, மனித சமுதாயம் வழக்கமாக சாப்பிட்டு வரக்கூடிய மீன், நண்டு, இறால் போன்ற உணவுகளாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடல் என்று ஆய்வு செய்து பார்த்தால், மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, நச்சுத் தன்மை கொண்ட, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய எத்தனையோ மிருகங்களும், உயிரினங்களும் கடலில் இருக்கின்றன. "கடலில் உள்ளவைகள் ஹலால்" என்ற வசனத்தை வைத்துக்கொண்டு, இந்த நச்சுப் பிராணிகளையும் ஹலால் என்று நாம் விளங்கிவிடக் கூடாது. மனிதனுக்கு நஞ்சாக மாறக்கூடிய எதையும் இஸ்லாம் ஒருபோதும் ஹலால் என்று சொல்லாது.
மனிதனுடைய உணவுக்குப் பயன்படக்கூடிய, மனிதன் இயல்பாகப் பிடித்து சாப்பிடக்கூடிய அமைப்பில் கடலில் உள்ள அனைத்துமே ஹலால் என்பதாகவே அந்த வசனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.