ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

உழ்ஹிய்யா (குர்பானி) இறைச்சியைச் சமைத்து மக்களுக்கு கொடுக்கலாமா? உழ்ஹிய்யா கொடுப்பவர்கள் அந்த இறைச்சியை உண்ணலாமா?

குர்பானி உணவு ஸகாத் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
உழ்ஹிய்யா (குர்பானி) இறைச்சியைச் சமைத்து மக்களுக்கு கொடுக்கலாமா? உழ்ஹிய்யா கொடுப்பவர்கள் அந்த இறைச்சியை உண்ணலாமா?
பதில்
பதில்:

உழ்ஹிய்யா இறைச்சியைச் சமைத்து மக்களுக்கு வழங்குவதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தவறும் இல்லை; தாராளமாக அவ்வாறு சமைத்துக் கொடுக்கலாம். அதனைச் சமைத்துக் கொடுப்பது சற்றுக் கடினமான செயலாக இருந்தாலும், அப்படி வழங்குவது பிழையாகாது.

இரண்டாவதாக, உழ்ஹிய்யா கொடுப்பவர்கள் அந்த இறைச்சியிலிருந்து தாங்களும் தாராளமாக எடுத்து உண்ணலாம். ஹதீஸ்களின் அடிப்படையில், இறைச்சியில் மூன்றில் ஒரு பங்கைத் தாங்களே எடுத்துக்கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆயினும், முழு இறைச்சியையும் தாங்களே எடுத்துக்கொள்ளாமல், ஏனைய ஏழை எளிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் பகிர்ந்தளிப்பதே உழ்ஹிய்யாவின் சிறந்த நோக்கமாகும்.

← முந்தையஅடுதது →