இறந்தவர்களுக்காக கபருஸ்தானத்தில் போய் குர்ஆன் ஓதுவதை ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். "உங்கள் வீடுகளை நீங்கள் கபருஸ்தானங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், அதிலே கொஞ்சம் தொழுங்கள்" என்று ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீடுகளிலே குர்ஆன் ஓதுங்கள், கபருஸ்தானைப் போன்று ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள்.
இதிலிருந்து கபருஸ்தானம் குர்ஆன் ஓதுவதற்கு அனுமதி வழங்கப்படாத இடம் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். எனவே, நாம் கபருஸ்தானில் குர்ஆன் ஓதக்கூடாது. ஆனால், அந்த இடத்தில் நாம் அவர்களுக்காக துஆ கேட்கலாம், பிரார்த்தனை செய்யலாம். அதைவிடுத்து, அந்த இடத்தில் போய் மக்கள் குர்ஆன் ஓதுவதோ அல்லது குர்ஆன் முடிப்பதோ மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பித்அத்தான காரியமாகும். இது தவிர்க்கப்பட வேண்டும்.