கேள்வி
இறுக்கமான காப்பு அல்லது மோதிரம் அணிந்திருப்பவர் வுழு செய்யலாமா? அதன் சட்டம் என்ன?
பதில்
பதில்:
ஒருவர் இறுக்கமான அல்லது நெருக்கமான ஒரு மோதிரத்தையோ காப்பையோ அணிந்தால், அந்த மோதிரத்தையும் காப்பையும் அசைப்பதன் மூலம் (அதாவது உருட்டுவதன் மூலம்) தண்ணீரை அதற்குள் போக வைக்க முடியுமாக இருந்தால் அவருடைய உளூ கூடும்.
ஆனால் அந்த இடத்திற்குள் தண்ணீர் அறவே படவே படாது என்ற அளவுக்கு மிக இறுக்கமாக இருந்தால், தண்ணீரைச் சேர்ப்பதற்காக அதை கட்டாயம் அசைக்க வேண்டும் அல்லது கழற்ற வேண்டும். தண்ணீர் படாவிட்டால் உளூ முழுமையாகாது.