ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பல்கலைக்கழகங்களில் மருத்துவம் போன்ற துறைகளில் படிக்கும் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து Group Study (குழுவாகப் பட

கல்வி பல்கலைக்கழகம் ஆண் பெண் கலப்பு குரூப் ஸ்டடி

← முந்தையஅடுதது →
கேள்வி
பல்கலைக்கழகங்களில் மருத்துவம் போன்ற துறைகளில் படிக்கும் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து Group Study (குழுவாகப் படிப்பது) செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்
பதில்:

அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும், கலப்பான கல்வி என்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. கல்வி கற்பதாக இருந்தால், ஆண்கள் முன்னாலும் பெண்கள் பின்னாலும் அமர்ந்து படித்துவிட்டு, அவர்கள் சென்றுவிட வேண்டிய ஒரு சூழ்நிலையில்தான் அது இருக்க வேண்டும். ஆனால் இன்றைய பல்கலைக்கழகங்களில் அப்படி இல்லை. சர்வசாதாரணமாக ஆண்களும் பெண்களும் பழகக்கூடிய அமைப்பிலும், பேசக்கூடிய, பரிகாசம் செய்து கொள்ளக்கூடிய, தொட்டுக் கொள்ளக்கூடிய அமைப்பிலும்கூட சில பல்கலைக்கழகங்கள் உள்ளன. காதலிப்பதற்கு சுதந்திரம் வழங்கி ஜோடி ஜோடியாக இருக்கக்கூடிய நிலைமைகளும் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

ஆனாலும், பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் நிறைய முஸ்லிம் மாணவர்கள் தங்கள் இஸ்லாத்தைக் கடைபிடிப்பதற்கு நிறைய முயற்சி எடுக்கிறார்கள். முஸ்லிம் மஜ்லிஸ் போன்ற அமைப்புகளை உருவாக்கி, பெண்களை ஒழுக்கமாகப் பேணுவதற்கான பல முயற்சிகளை எடுக்கிறார்கள். ஒரு 20% அல்லது 30% தவறுகள் நடந்தாலும், இஸ்லாத்தை பேண வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் நிறையவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

அப்படிப் பேணக்கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், இயன்ற அளவுக்கு இந்த "குரூப் ஸ்டடி" (Group Study) முறையில் அந்நிய ஆண்-பெண் கலப்பதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்குமாக இருந்தால், அதைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். அதையும் மீறி, குரூப் ஸ்டடி செய்துதான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தால், பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு, இஸ்லாமிய ஒழுக்கத்தோடு, பேச்சை வரம்புக்குள் (Limit) வைத்து, ஒரு 10, 15 மாணவர்கள் இருக்கக்கூடிய சபையில் அந்தப் படிப்புகளை வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பேணுதலை அளிக்கும் என்றுதான் நாம் அறிவுரையாகச் சொல்ல முடியும்.

அல்லாஹுத்தஆலா இந்தச் சூழல்களை எல்லாம் மாற்றி, முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணாமல் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.

← முந்தையஅடுதது →