ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அல்குர்ஆனைக் கொண்டு அல்லாஹ் மனிதர்களை வழிகெடுப்பான் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா? இதன் உண்மையான விளக்கம் என்ன?

அல்குர்ஆன் நேர்வழி வழிகேடு கழா கத்ர்

← முந்தையஅடுதது →
கேள்வி
அல்குர்ஆனைக் கொண்டு அல்லாஹ் மனிதர்களை வழிகெடுப்பான் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா? இதன் உண்மையான விளக்கம் என்ன?
பதில்
பதில்:

குர்ஆனைக் கொண்டு அல்லாஹுத்தஆலா மனிதர்களை நேரடியாக வழிகெடுப்பான் என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. மாறாக, "இந்த குர்ஆன் உறுதியான நேர்வழியைக் காட்டுகிறது" என்றே அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்.

ஆனால், அல்லாஹுத்தஆலா குர்ஆனில் பல உதாரணங்களைச் சொல்லிக் காட்டுகிறான். அந்த உதாரணங்களின் மூலம் "அல்லாஹ் பலருக்கு நேர்வழி காட்டுகிறான், பலரை வழிதவறச் செய்கிறான் (யுழில்லு பிஹீ கஸீரன் வயஹ்தீ பிஹீ கஸீரா)" என்று குறிப்பிடுகிறான். இதன் அர்த்தம் குர்ஆன் தானாகவே ஒருவரை வழிகெடுக்கும் என்பதல்ல. மாறாக, குர்ஆனை ஒரு மனிதன் அணுகும் விதத்தைப் பொறுத்தே அது அமைகிறது.

ஒருவர் நல்ல எண்ணத்தோடும், சத்தியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தூய நோக்கத்தோடும் குர்ஆனை அணுகினால், அல்லாஹ் அவருக்கு குர்ஆனின் மூலம் நேர்வழியைக் காட்டுகிறான். ஆனால், ஒருவர் குர்ஆனைக் குதர்க்கமாக விமர்சிக்க வேண்டும், அதில் பிழைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு அணுகினால், குர்ஆனில் உள்ள உதாரணங்களைப் பார்த்து "இதெல்லாம் ஒரு உதாரணமா?" என்று ஏளனம் செய்வார். இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர்களின் வழிகேட்டை அல்லாஹ் மேலும் அதிகப்படுத்துகிறான். எனவே, வழிகேட்டிற்கு காரணம் குர்ஆன் அல்ல; அதைத் தவறான முறையில் அணுகும் மனிதனின் கெட்ட எண்ணமேயாகும்.

இதனால்தான், "குர்ஆன் இறையச்சம் உள்ளவர்களுக்கு (முத்தகீன்களுக்கு) நேர்வழி காட்டும்" என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே, "குர்ஆனைப் படித்தால் வழிகெட்டுப் போய்விடுவோம்" என்று யாராவது கூறினால், அது அப்பட்டமான குஃப்ரான (இறைமறுப்பான) வார்த்தையாகும்.

← முந்தையஅடுதது →