ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அல்குர்ஆனில் எழுத்துப்பிழை இருப்பதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக வரும் அறிவிப்பின் உண்மை நிலை என்ன? அல்குர்ஆனை தொ

அல்குர்ஆன் எழுத்துப்பிழை ஆயிஷா (ரழி) இலக்கணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
அல்குர்ஆனில் எழுத்துப்பிழை இருப்பதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக வரும் அறிவிப்பின் உண்மை நிலை என்ன? அல்குர்ஆனை தொகுத்தவர்கள் பிழை விட்டுவிட்டார்கள் என்று அவர்கள் கூறினார்களா?
பதில்
பதில்:

அல்குர்ஆனை எழுதியவர்கள் (எழுத்தர்கள்) பிழை விட்டுவிட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக சில கிரந்தங்களில் ஒரு செய்தி காணப்படுகிறது. குறிப்பாக "இன் ஹாதானி லசாஹிரானி" (சூரா தாஹா) என்ற வசனத்தில் "இன்ன" என்ற சொல்லுக்குப் பின்னால் "ஹாதைனி" என்றுதான் அரபு இலக்கணப்படி வர வேண்டும், எனவே எழுதியவர்கள் பிழை விட்டுவிட்டார்கள் என்று அவர்கள் கூறியதாக அந்த அறிவிப்பு சொல்கிறது. இது முற்றுமுழுதாக தவறான மற்றும் அடிப்படையற்ற ஒரு வாதமாகும்.

1. இலக்கணத்தின் அடிப்படை:
எந்தவொரு மொழியாக இருந்தாலும், இலக்கணம் என்பது அந்த மொழி பேசும் பழங்குடி மக்களின் ஆரம்பகாலப் பேச்சு வழக்கை (அஸ்ருல் இஹ்திஜாஜ்) அடிப்படையாகக் கொண்டுதான் வகுக்கப்படுகிறது. இலக்கண விதிகளை வைத்து பழங்கால மக்களின் பேச்சைத் தவறு என்று கூறுவது அறியாமையாகும். அல்குர்ஆன் இறங்கிய காலமும் அதைத் தொடர்ந்த காலமும் இலக்கணம் முறையாக வகுக்கப்படாத காலமாகும். அந்த காலத்து மக்களின் பேச்சுவழக்கைக் கொண்டுதான் பிற்காலத்தில் இலக்கணச் சட்டங்களே வகுக்கப்பட்டன. குர்ஆனில் உள்ள சில வசன அமைப்புகள் அன்றைய குறிப்பிட்ட கோத்திரத்தினரின் (உதாரணமாக பனூ ஹாஷிம்) பேச்சு வழக்காக இருக்கலாம். எனவே, பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட இலக்கண விதிகளை வைத்து குர்ஆனில் பிழை உள்ளது என்று கூறுவது அறிவுப்பூர்வமற்றதாகும்.

2. செய்தியின் பலவீனம்:
ஆயிஷா (ரழி) அவர்கள் குர்ஆனில் பிழை இருப்பதாகக் கூறியதாக வரும் அந்த அறிவிப்பு ஹதீஸ் கலை ரீதியாக மிகவும் பலவீனமான (ழயீஃப்) மற்றும் ஒன்றுக்கொன்று குழப்பம் நிறைந்த ஒரு செய்தியாகும். அதன் அறிவிப்பாளர் வரிசைகளை ஆராய்ந்தாலே அதன் பலவீனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

3. தற்போதைய குர்ஆன் பிரதியின் நிலை:
ஒருவேளை ஆயிஷா (ரழி) அவர்கள் அப்படி கூறியதாக அந்த பலவீனமான செய்தியை நாம் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் உஸ்மான் (ரழி) காலத்தில் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்பட்ட பொதுப் பிரதியைக் குறைகூறவில்லை. யாருடையதோ ஒரு தனிப்பட்ட எழுத்துப் பிரதியைப் பார்த்து "இதை எழுதியவர் பிழை விட்டுள்ளார்" என்று அவர்கள் கூறியிருக்கலாம். ஏனெனில், ஆயிஷா (ரழி) அவர்கள் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படும் அந்த எழுத்துப்பிழை "இன்ன ஹாதானி" என்பதாகும் ("இன்ன" என்று வந்தால் "ஹாதைனி" என்று வர வேண்டும்). ஆனால் இன்றைக்கு நம்மிடம் உள்ள எந்த குர்ஆன் பிரதியிலும் அவ்வாறு எழுதப்படவில்லை; மாறாக இலக்கணப்படியே "இன் ஹாதானி" (இன் என்று வருவதால் ஹாதானி என்பது சரி) என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இன்றுள்ள எந்தவொரு குர்ஆனிலும் அந்தப் பிழையே இல்லாத போது, இதை வைத்துக்கொண்டு குர்ஆனில் பிழை உள்ளது என்று வாதிடுவது மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.

← முந்தையஅடுதது →