ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அல்லாஹுத்தஆலா முதன்முதலாகப் படைத்த படைப்பு என்ன? அதற்கான ஹதீஸ் ஆதாரங்கள் என்ன?

முதல் படைப்பு பேனை கலம் தண்ணீர்

← முந்தையஅடுதது →
கேள்வி
அல்லாஹுத்தஆலா முதன்முதலாகப் படைத்த படைப்பு என்ன? அதற்கான ஹதீஸ் ஆதாரங்கள் என்ன?
பதில்
பதில்:

அல்லாஹுத்தஆலா முதன்முதலாக எதைப் படைத்தான் என்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையே ஹதீஸ்களின் அடிப்படையில் சிறிய கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

முதலாவது நிலைப்பாடு (பேனை - அல் கலம்):
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் முதன்முதலாகப் படைத்தது பேனையை (அல்-கலம்) ஆகும். அதைப் படைத்தவுடன் 'எழுது' என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அது 'நான் என்ன எழுத வேண்டும்?' எனக் கேட்டது. 'உலகத்தில் நடக்கவிருக்கின்ற அனைத்தையும் எழுது' என அல்லாஹ் கூறினான். உடனே அந்தப் பேனை உலகத்தில் நடக்கவிருக்கும் அனைத்தையும் எழுதியது." (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரழி), நூல்: திர்மிதி). இந்த ஹதீஸின் அடிப்படையில் உலகப் படைப்புகளில் முதலாவது படைப்பு பேனை என்பது உறுதியாகிறது.

இரண்டாவது நிலைப்பாடு (தண்ணீர் மற்றும் அர்ஷ்):
இதே ஹதீஸின் தொடர்ச்சியிலோ அல்லது பிற அறிவிப்புகளிலோ "அந்த நேரத்தில் அல்லாஹ்வின் அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீது இருந்தது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குர்ஆனில் "நாம் எல்லாவற்றையும் தண்ணீரிலிருந்தே படைத்தோம்" என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அர்ஷும் தண்ணீரும் ஒரு படைப்பாகும். பேனையைப் படைக்கும் முன்பே தண்ணீரும் அர்ஷும் இருந்ததால், இறைவனின் படைப்புகளில் முதலாவது தண்ணீர், பின்னர் அர்ஷ், அதன் பின்னரே பேனை படைக்கப்பட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

எனவே, இதனை நாம் எவ்வாறு ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், "இந்த அண்டசராசர உலகப் படைப்புகளில் முதன்முதலாகப் படைக்கப்பட்டது பேனை ஆகும்; ஆனால் ஒட்டுமொத்த இறைப் படைப்புகளில் முதலாவதாகப் படைக்கப்பட்டது தண்ணீரும், அதன் பின் அர்ஷும் ஆகும்" என்று புரிந்து கொள்வதே மிகவும் பொருத்தமானதாகும்.

இதைத் தவிர்த்து, அல்லாஹுத்தஆலா முஹம்மது (ஸல்) அவர்களது ஒளியைத்தான் (நூரை) முதலில் படைத்தான் என்றோ, முஹம்மது (ஸல்) அவர்களின் பொருட்டால் தான் உலகத்தையே படைத்தான் என்றோ, மூளையைத்தான் முதலில் படைத்தான் என்றோ கூறப்படும் செய்திகள் அனைத்தும் மார்க்க அடிப்படை அற்ற, இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.

← முந்தையஅடுதது →