கேள்வி
அலி (ரழி) மற்றும் பாத்திமா (ரழி) ஆகியோரின் வறுமை நிலையில், ஜிப்ரீல் (அலை) ஒட்டகத்தை விற்பதாகவும் மீக்காயில் (அலை) வாங்குவதாகவும் சொல்லப்படும் தர்மம் பற்றிய சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஆதாரப்பூர்வமானதா?
பதில்
பதில்:
அலி (ரழி) மற்றும் பாத்திமா (ரழி) ஆகியோர் சம்பந்தமாகப் பரப்பப்படும் இந்த சம்பவம் முற்றிலும் அடிப்படையற்ற, இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஒரு செய்தியாகும். நம்பகமான ஹதீஸ் கிரந்தங்கள் எதிலும் இவ்வாறான ஒரு செய்தி பதிவு செய்யப்படவில்லை.
யாரோ சிலர் ஆர்வக் கோளாறிலோ அல்லது அலி (ரழி) அவர்கள் மீதிருந்த அதீத பற்றின் காரணமாகவோ இவ்வாறான கற்பனைச் செய்திகளை இட்டுக்கட்டியிருக்கலாம். பசியின் பிடியில் அலி (ரழி) அவர்கள் தர்மம் செய்தார்கள் என்பதற்காக, ஜிப்ரீல் (அலை) ஒட்டகத்தை விற்பவராகவும், மீக்காயில் (அலை) அதனை வாங்குபவராகவும் வந்தார்கள் என்று சொல்வது ஒரு கட்டுக்கதையாகும். இவ்வாறான பொய்யான சம்பவங்களை மார்க்கத்தின் பெயரால் பரப்புவதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.