ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அதானுக்கு பதில் சொல்வது போல் இகாமத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமா? இகாமத்துக்கு என்று ஏதேனும் தனி துஆ உண்டா?

அதான் இகாமத் துஆ ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
அதானுக்கு பதில் சொல்வது போல் இகாமத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமா? இகாமத்துக்கு என்று ஏதேனும் தனி துஆ உண்டா?
பதில்
பதில்:

அதானுக்கு பதில் சொல்வது போன்று இகாமத்துக்கும் பதில் சொல்வது மார்க்கத்தில் சுன்னத்தான ஒரு செயலாகும். ரசூல் (ஸல்) அவர்கள் கூறும்போது, "முஅத்தின் (பாங்கு சொல்பவர்) சொல்வதை நீங்கள் கேட்டால், அவர் சொல்வதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள்" என்று பொதுப்படையாகவே வழிகாட்டியுள்ளார்கள். இந்த ஹதீஸ் அதானுக்கும் பொருந்தும், இகாமத்துக்கும் பொருந்தும். இரண்டுக்கும் இடையில் இந்த ஹதீஸ் எவ்வித வித்தியாசத்தையும் காட்டவில்லை.

சில இஸ்லாமிய அறிஞர்கள் அதானுக்கு பதில் சொல்வதை கட்டாயம் (வாஜிப்) என்றும், இகாமத்துக்கு பதில் சொல்வதை சுன்னத் என்றும் தரம் பிரித்தாலும், இரண்டிற்குமே பதில் சொல்வது மிகச் சிறந்த மற்றும் விரும்பத்தக்க ஒரு செயலாகும்.

ஆனால், இகாமத் சொல்லப்படும் போது "கத் காமதிஸ் ஸலாஹ்" என்று முஅத்தின் சொல்லும் போது, அதற்குப் பதிலாக "அகாமஹல்லாஹு வ அதாமஹா" என்று சொல்ல வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு வழமை இருக்கிறது. இவ்வாறு சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் கிடையாது; இது பலவீனமான செய்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். எனவே, இதற்கென எந்தத் தனி துஆவும் கிடையாது, முஅத்தின் இகாமத்தில் என்ன சொல்கிறாரோ அதையே நாமும் திரும்பச் சொல்வதுதான் சரியான மார்க்க வழிகாட்டலாகும்.

← முந்தையஅடுதது →