ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) போன்ற பொது அமைப்புகளில் தவ்ஹீத் கொள்கையுடைய உலமாக்கள் அங்கம் வகிப்பது தவறா?

ACJU ஜம்இய்யத்துல் உலமா அல்லாஹ் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) போன்ற பொது அமைப்புகளில் தவ்ஹீத் கொள்கையுடைய உலமாக்கள் அங்கம் வகிப்பது தவறா?
பதில்
பதில்:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) போன்ற அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்துக்கோ, மத்ஹபுக்கோ அல்லது தரீக்காவுக்கோ சொந்தமானவையல்ல. அது ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பொது அமைப்பு (சட்ட யாப்போடு இயங்கும் அமைப்பு). இத்தகைய பொது அமைப்புகளில், குர்ஆன் மற்றும் சுன்னாவைப் பின்பற்றும் தவ்ஹீத் கொள்கையுடைய உலமாக்கள் தங்களது உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் அதில் அங்கம் வகிப்பதன் மூலம், தவறான ஃபத்வாக்கள் வெளிவருவதைத் தடுத்து நிறுத்தலாம்; அல்லது தங்களது சரியான கொள்கையின் தாக்கத்தை அந்த சபையில் ஏற்படுத்தி சமுதாயத்தைப் பாதுகாக்கலாம் என்ற நிலை இருந்தால், தாராளமாக அதில் அங்கம் வகிக்கலாம். "அதில் சேரவே கூடாது" என்று சொல்வது பிழையான அணுகுமுறையாகும். யூசுப் (அலை) அவர்கள் கூட ஒரு குஃப்ரான ஆட்சியில் பொருளாதாரப் பொறுப்பைக் கேட்டுப் பெற்று, நீதியை நிலைநாட்ட முயற்சி செய்தார்கள் என்பதை நாம் குர்ஆனில் காண்கிறோம். பேசுகின்ற உரிமை கிடைக்கின்ற இடத்தில் நமது உரிமையை நிலைநாட்டுவது தவறல்ல.

ஆனால், அந்த அமைப்பில் இணைந்து கொண்டு, அங்கிருக்கும் சிலர் செய்யும் அனைத்து மத்ஹப் சார்பான தவறுகளுக்கும் தலைசாய்த்து உடன்படுவதாக இருந்தால், அவர்கள் நிச்சயமாக விமர்சிக்கப்பட வேண்டியவர்கள். அங்குள்ளவர்கள் செய்யும் தவறான போக்குகளுக்கு அடிபணியாமல், குர்ஆன் சுன்னாவின் குரலாகப் போராட முடியுமானால் அதில் அங்கம் வகிப்பது வரவேற்கத்தக்கதே தவிர, சமுதாயத்தில் உள்ள ஒரு பொது அமைப்பை விட்டு முழுமையாக ஓடி ஒதுங்குவது ஒரு நல்ல வழிகாட்டல் அல்ல.

← முந்தையஅடுதது →