கேள்வி
"யா அவ்வலல் அவ்வலீன், யா ஆஹிரல் ஆஹிரீன், யா தல் குவ்வத்தில் மத்தீன்" என்று தொடர்ந்து பாத்திமா (ரழி) அவர்கள் சொல்லிக் கொடுத்ததாகக் கூறப்படும் துஆ ஆதாரப்பூர்வமானதா?
பதில்
பதில்:
இந்த துஆ ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிரந்தங்கள் எதிலும் இடம்பெறவில்லை. இது முற்றிலும் அடிப்படையற்ற, இட்டுக்கட்டப்பட்ட ஒரு பலவீனமான செய்தியாகும்.
சில உருது புத்தகங்களில் மட்டுமே இந்த செய்தி காணப்படுகிறதே தவிர, இதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ அல்லது பாத்திமா (ரழி) அவர்களோ சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்கு எவ்வித இஸ்லாமிய வரலாற்று அல்லது ஹதீஸ் கலை ரீதியான அடிப்படையும் கிடையாது. மார்க்க அறிஞர்களிடம் விசாரித்த போது, உருதுப் புத்தகங்கள் மூலம் மட்டுமே இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது. எனவே, ஆதாரமற்ற இந்த துஆவைப் பரப்புவதோ செயல்படுத்துவதோ மார்க்கத்தில் கூடாது.