ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

23 ரக்அத்கள் தராவீஹ் தொழப்படும் இடத்தில் நாம் 11 ரக்அத்களோடு திரும்பி வருவது கூடுமா? சஹாபாக்கள் பிளவை (இஃதிலாஃப்) பயந்து

தராவீஹ் நோன்பு 11 ரக்அத் 23 ரக்அத்

← முந்தையஅடுதது →
கேள்வி
23 ரக்அத்கள் தராவீஹ் தொழப்படும் இடத்தில் நாம் 11 ரக்அத்களோடு திரும்பி வருவது கூடுமா? சஹாபாக்கள் பிளவை (இஃதிலாஃப்) பயந்து இமாமைப் பின்பற்றியது போல நாமும் இமாமை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமா?
பதில்
பதில்:

23 ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழப்படும் இடத்தில், ஒருவர் 11 ரக்அத்கள் தொழுதுவிட்டுத் திரும்பி வருவதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தவறும் இல்லை . அது ஒரு சுன்னத்தான தொழுகையாகும் . இமாம் 23 ரக்அத்கள் தொழுதாலும், அல்லது 11 ரக்அத்கள் மட்டும் நடக்கும் ஜமாஅத்தாக இருந்தாலும், நீங்கள் 4 அல்லது 6 ரக்அத்களோடு திரும்பி வந்துவிட்டு, பின்னர் தனியாக வித்ர் தொழுது கொள்வதிலும் எவ்விதப் பிழையும் இல்லை .

ஆனால், சில அறிஞர்கள் "பிளவு (இஃதிலாஃப்) வந்துவிடும்" என்பதற்காக 23 ரக்அத்களையும் இமாமோடு தொழுது முடிப்பதே சரி என்று வாதிடுகின்றனர் . இதற்காக உஸ்மான் (ரழி) அவர்கள் மினாவில் நான்கு ரக்அத்கள் தொழுவித்த போது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அதனை விமர்சித்தாலும், "நான் பிளவை (இஃதிலாஃப்) பயப்படுகிறேன்" என்று கூறி இமாமைப் பின்பற்றி நான்கு ரக்அத்களாகத் தொழுத வரலாற்று நிகழ்வை ஆதாரமாகக் காட்டுகிறார்கள் .

இந்த வாதம் முற்றிலும் தவறானதும் பொருத்தமற்றதுமாகும் . உஸ்மான் (ரழி) அவர்கள் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர் (கலீஃபா). ஆட்சியாளருக்குப் பின்னால் ஒரு பெரிய நபித்தோழர் தனியாக வேறொரு தொழுகையைத் தொழுதால், அது ஆட்சிக்கு எதிரான ஒரு பிரகடனமாக அல்லது ஆட்சியாளரை எதிர்ப்பதற்குரிய ஒரு கலகமாகப் பார்க்கப்படும் . அப்படிப்பட்ட ஒரு அரசியல் பிளவைத்தான் அவர் விரும்பவில்லை . மேலும், ஒரு பிரயாணி இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டிய இடத்தில் நான்கு ரக்அத்கள் தொழுவது மாபெரும் பாவமோ தவறோ அல்ல; அங்கு இரண்டும் தொழலாம், நான்கும் தொழலாம் என்ற நிலையே காணப்பட்டது . இதேபோன்று, பிற்கால ஆட்சியாளர்கள் தொழுகையைப் பிற்படுத்தினால், நீங்கள் வீட்டில் தொழுதுவிட்டு அவர்களோடும் இணைந்து தொழுங்கள் என்று நபிகளார் கூறியதும், ஆட்சியாளருக்கு எதிரான பிளவைத் தடுப்பதற்காகவேயாகும் .

ஆனால், இன்றைய காலத்தில் நமது ஊர்களில் நடக்கும் பள்ளிவாசல் ஜமாஅத்துக்களில், 11 ரக்அத்களோடு திரும்பி வருவதால் ஆட்சி கவிழப்போவதோ, அரசியல் பிளவு வரப்போவதோ கிடையாது . நாம் 11 ரக்அத்கள் சுன்னா என்று தெளிவாக விளங்கி வைத்திருக்கிறோம் . எனவே, 23 ரக்அத்கள் தொழும் இமாமுக்கு பின்னால் 11 ரக்அத்கள் தொழுதுவிட்டுத் திரும்பி வருவதுதான் சரியானதாகும் , . இமாமோடு 23 ரக்அத்கள் தொழுபவர்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் . ஆனால், "பிளவு வந்துவிடும்" என்ற போலியான காரணத்தைக் காட்டி, சுன்னா என்று நாம் உறுதியாக நம்பும் 11 ரக்அத்களைத் தாண்டித் தொழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்கு மார்க்கத்தில் எவ்வித நியாயமும் இல்லை .

← முந்தையஅடுதது →