ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

20 ரக்அத்கள் தராவீஹ் தொழும் இமாமுக்கு பின்னால், நாம் 8 அல்லது 11 ரக்அத்கள் மட்டும் தொழுதுவிட்டு வரலாமா? அவ்வாறு வருபவர்க

தராவீஹ் நோன்பு 11 ரக்அத் 20 ரக்அத்

← முந்தையஅடுதது →
கேள்வி
20 ரக்அத்கள் தராவீஹ் தொழும் இமாமுக்கு பின்னால், நாம் 8 அல்லது 11 ரக்அத்கள் மட்டும் தொழுதுவிட்டு வரலாமா? அவ்வாறு வருபவர்களை ஒற்றுமையைக் குலைப்பவர்கள் என்று விமர்சிப்பது சரியா?
பதில்
பதில்:

20 ரக்அத்கள் தராவீஹ் தொழக்கூடிய இமாமுக்கு பின்னால் தொழுதுவிட்டு, நாம் 8 அல்லது 11 ரக்அத்களோடு திரும்புவதில் எவ்விதத் தவறும் கிடையாது . எது சுன்னாவோ அதைத்தான் நாம் முக்கியத்துவப்படுத்த வேண்டும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்களுக்கு மேலாகத் தொழுததில்லை என்பதை ஆதாரப்பூர்வமான செய்திகள் ஊடாக நாம் அறிகிறோம் . ஸஹீஹ் புகாரியில் நபிகளார் 11 ரக்அத்களுக்கு மேல் தொழவில்லை என்ற செய்தி தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது .

அவ்வாறிருக்க, ஒரு இளைஞர் சுன்னாவுக்கு மாற்றமான ஒன்று நடப்பதைப் பார்த்துவிட்டு 11 ரக்அத்களோடு திரும்பிச் சென்றால், அவரை "ஒற்றுமையைக் குலைக்கின்ற மோசமானவர்" என்று விமர்சிப்பது மிகவும் தவறானதாகும் . மாறாக, சுன்னாவைப் பின்பற்றும் அந்த இளைஞர்களை நாம் பாராட்ட வேண்டும் . எனவே, சுன்னாவைக் கடைப்பிடிக்கும் நோக்கில் 11 ரக்அத்கள் தொழுதுவிட்டு விலகிச் செல்பவர்களை பிழை காண முடியாது; இது ஒருபோதும் ஒற்றுமையைக் குலைக்கும் செயலும் ஆகாது .

← முந்தையஅடுதது →