இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழ்களில் குறிப்பிட்டு, அவர்களும் இந்த விருந்துக்கு அழைக்கிறார்கள் என்று அச்சிடுவது முற்றுமுழுதாகத் தவிர்க்கப்பட வேண்டிய, மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலாகும். இது இஸ்லாமிய அகீதாவில் (கொள்கையில்) மிகப்பெரிய வழிகேட்டை ஏற்படுத்தக்கூடிய பிழையான வார்த்தைப் பிரயோகமாகும்.
அழைப்பிதழில் இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம், இறந்தவர்கள் இந்த விருந்தைப் பற்றி அறிந்துள்ளார்கள், அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், அவர்களும் நேரில் சமூகமளிக்கிறார்கள் போன்ற தவறான நம்பிக்கைகளை (ஷிர்க்கான எண்ணங்களை) அது விதைக்கிறது. அச்சிடுபவர்களின் எண்ணம் முழுக் குடும்பத்தின் பிரதிநிதித்துவத்தைக் காட்டுவதாக இருந்தாலும் கூட, இறந்தவர்கள் அழைப்பதாகக் கூறும் இந்த வார்த்தைகள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு நேர்முரணானவையாகும். எனவே, இத்தகைய ஷிர்க்கான, குஃப்ரான வார்த்தைப் பிரயோகங்களை அழைப்பிதழ்களில் பயன்படுத்துவதை முஸ்லிம்கள் முற்றுமுழுதாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.