கேள்வி
பள்ளியில் தராவீஹ் மற்றும் வித்ர் தொழுதுவிட்டு வந்து, வீட்டில் தூங்குவதற்கு முன்னால் மீண்டும் சுன்னத் தொழ முடியுமா?
பதில்
பதில்:
வித்ர் தொழுகை என்பது ஒரு நாளின் இரவுத் தொழுகைகளில் இறுதியானதாக அமைய வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும். எனவே, நீங்கள் வித்ர் தொழுதுவிட்டால் அதுவே அன்றைய இரவின் இறுதித் தொழுகையாகும்.
எனினும், ஒருவர் பள்ளியில் வித்ர் தொழுத பின்னர், வீட்டில் மீண்டும் தொழ நாடினால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரங்கள் காணப்படுகின்றன. ரசூல் (ஸல்) அவர்கள் வித்ருக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதிருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு தொழுத பின்னர் மீண்டும் ஒருமுறை வித்ர் தொழக் கூடாது. "ஓர் இரவில் இரண்டு வித்ர் தொழுகைகள் கிடையாது" என்று ரசூல் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க