கேள்வி
வியாபாரத்தில் மற்றவர்கள் நமக்குத் தர வேண்டிய கடன்களுக்கு (வர இருக்கும் பணத்திற்கு) நாமே முன்கூட்டியே ஸகாத் கொடுக்க வேண்டுமா?
பதில்
பதில்:
வியாபாரத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ உங்களுக்குப் பிறரிடமிருந்து வர வேண்டிய கடன்களுக்கு முன்கூட்டியே ஸகாத் கொடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை. நீங்கள் விற்ற பொருட்களுக்கான பணம் இன்னும் உங்கள் கைவசம் வந்து சேரவில்லை என்றால், அது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.
அந்தப் பணம் என்றைக்கு உங்கள் கைக்கு வந்து சேருகிறதோ, அன்றுமுதல் அது உங்களுடைய உரிமையாக மாறுகிறது. அந்தப் பணம் ஸகாத்துடைய நிபந்தனைகளை (நிஸாப்) அடைந்து, உங்கள் கையில் அது தங்கியிருந்தால் மட்டுமே நீங்கள் அதற்கு ஸகாத் வழங்க வேண்டும். உங்களை வந்தடையாத, வெளி ஆட்களிடம் இருக்கும் கடன்களுக்கு நீங்கள் ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க