ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

வருடா வருடம் (ஆண்டுதோறும்) ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் நேரடியான வார்த்தைகளில் ஆதாரம் இல்லையே? அதனை எவ்வாறு

ஸகாத்

← முந்தையஅடுதது →
கேள்வி
வருடா வருடம் (ஆண்டுதோறும்) ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் நேரடியான வார்த்தைகளில் ஆதாரம் இல்லையே? அதனை எவ்வாறு புரிந்துகொள்வது?
பதில்
பதில்:

வருடா வருடம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நேரடியான வார்த்தைகளில் ஹதீஸ் இல்லை என்றாலும், செயல் வடிவில் இஸ்லாமிய உம்மத் அதனை எவ்வாறு புரிந்து நடைமுறைப்படுத்தி வருகிறதோ அதுதான் அதற்கான சரியான விளக்கமாகும்.

உதாரணமாக, "இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள்" என்று நபி (ஸல்) கூறினார்கள்; ஆனால் சத்தமிட்டுச் சொல்லுங்கள் என்று எந்த ஹதீஸிலும் வரவில்லை. எனினும் சஹாபாக்கள் காலத்தில் இருந்து உம்மத் சத்தமிட்டு சொல்வதைத்தான் நடைமுறைப்படுத்துகிறது. அதேபோல, ஸகாத்துல் பித்ராவை நோன்பாளி கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்; ஆனால் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் நாம் வருடா வருடம் கொடுக்கிறோம்.

ஸகாத்தைப் பொறுத்தவரை "அறுவடை செய்யும் நாளில் அதன் ஹக்கை கொடுத்து விடுங்கள்" என்று அல்லாஹ் சொல்கிறான், இது தானியங்களுக்குரியது. மற்ற தங்கம், வெள்ளி, வியாபாரப் பொருள் போன்ற ஸகாத்துகளுக்கு இந்த கட்டளை வரவில்லை என்றால், ஒரு வருடம் பூர்த்தியானதும் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையைத் தான் சஹாபாக்கள் காலத்திலிருந்து உம்மத் பின்பற்றி வருகிறது. ஒரு சொத்தில் ஒரு வருடம் பூர்த்தியாகும் வரை ஸகாத் இல்லை என்று வரும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்றாலும், சஹாபாக்களின் நடைமுறை மற்றும் இஜ்மா அடிப்படையில் வருடா வருடம் கொடுப்பதே இஸ்லாமிய மார்க்கத்தின் உறுதியான சட்டமாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →