மார்க்க ரீதியாக, மாதவிடாயைத் தடுப்பதற்கான மருந்துகளைக் குடிப்பது தடை செய்யப்படவில்லை. எனினும், இதனைத் தவிர்த்துக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும். இத்தகைய வழிமுறைகள் நபிகளார் காலத்திலும் காணப்பட்டன.
ஆனால், ஒரு பெண் தொடர்ந்து இவ்வாறான மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவளது உடலில் பக்கவிளைவுகளோ (Side Effects) அல்லது நோயோ ஏற்படுமாக இருந்தால், அதைப் பயன்படுத்துவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு சில தடவைகள் பயன்படுத்துவதால் நோய் ஏற்படாது என்றாலும், இயற்கையான இந்த சுழற்சியைத் தடுப்பதைத் தவிர்ப்பதே ஆரோக்கியமானது.
மேலும், மாதவிடாய் காரணமாக நோன்பு அல்லது தவாஃப் விடுபடுகிறதே என்று ஒரு பெண் கவலைப்படுவதற்கும் அவளுக்கு இறைவனிடத்தில் மகத்தான கூலி உண்டு. எனவே, மார்க்கம் காட்டிய அந்த இயற்கையான சலுகையை ஏற்று, கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு மார்க்க வரம்புகளுக்குள் நடப்பதே மிகவும் சிறந்ததாகும். எனினும், ஒரு பெண் கட்டாயம் பயன்படுத்தலாமா என்று கேட்டால், மார்க்கத்தில் அதற்கு நேரடியான தடையுமில்லை.