ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ரமழான் மாதம் பிறந்து விட்டால் ''ரமழான் வாழ்த்துக்கள்'' எனத் தெரிவிக்கலாமா? ''ரமழான் கரீம்'' என்று சொல்வது கூடுமா?

அகீதா துஆ

← முந்தையஅடுதது →
கேள்வி
ரமழான் மாதம் பிறந்து விட்டால் ''ரமழான் வாழ்த்துக்கள்'' எனத் தெரிவிக்கலாமா? ''ரமழான் கரீம்'' என்று சொல்வது கூடுமா?
பதில்
பதில்:

ரமழான் வந்த செய்தியை மக்களுக்கு அறிவித்து அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் எவ்விதத் தவறுமில்லை. ஒருவருக்கொருவர் இந்த மாதத்தில் நன்மைகளைச் செய்ய ஆர்வமூட்டிக் கொள்வதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், இதை ஒரு "வாழ்த்து" (Greeting) என்ற வழிபாட்டு முறையாகவோ அல்லது துஆவாகவோ ஆக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சஹாபாக்கள் காலத்தில் ஒருவருக்கொருவர் ரமழானுக்காக வாழ்த்துச் சொல்லும் நடைமுறை இருந்ததாக ஹதீஸ்களில் எந்தப் பதிவும் இல்லை. இஸ்லாத்தில் எந்தவொரு நல்ல நிகழ்வுக்கும் துஆச் செய்யும் முறையே உள்ளதே தவிர, வாழ்த்து என்ற ஒரு கலாச்சாரம் இல்லை. இதை ஒரு கட்டாய நடைமுறையாக ஆக்கிக் கொண்டால் அது காலப்போக்கில் ஒரு பித்அத்தாக மாறிவிடும்.

அதேவேளை, ''ரமழான் கரீம்'' (சங்கையான ரமழான்) என்று சொல்வதில் எவ்வித மார்க்க முரண்பாடும் இல்லை. இது துஆ அல்ல, அந்த மாதத்தின் சிறப்பைக் குறிக்கும் ஒரு மொழி வார்த்தையாகும். அல்குர்ஆனில்கூட ''கரீம்'' என்ற வார்த்தை உணவுகளுக்கும், பிற கண்ணியமான வஸ்துக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மொழி அடிப்படையில் ''ரமழான் கரீம்'' என்று பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் கிடையாது.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →