ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ரமழான் மாதத்தின் 30 நாட்களையும் ரஹ்மத்துடைய பத்து (10), மஃபிர்ரத்துடைய (பாவமன்னிப்பு) பத்து, நரக விடுதலையின் பத்து என மூ

நோன்பு ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
ரமழான் மாதத்தின் 30 நாட்களையும் ரஹ்மத்துடைய பத்து (10), மஃபிர்ரத்துடைய (பாவமன்னிப்பு) பத்து, நரக விடுதலையின் பத்து என மூன்றாகப் பிரிப்பது சரியா? இதற்கு ஹதீஸ் ஆதாரம் உண்டா?
பதில்
பதில்:

ரமழான் மாதத்தை இவ்வாறு மூன்றாகப் பிரிப்பது பலவீனமான (ழயீஃபான) செய்தியாகும். சல்மான் பாரிஸி (ரழி) அவர்கள் அறிவிப்பதாக, ரசூல் (ஸல்) அவர்கள் ரமழானைப் பற்றி நீண்ட உரை நிகழ்த்தியதாகவும், அதில் இந்த மூன்று பகுதிகளைக் குறிப்பிட்டதாகவும் ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

ஆனால், இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ''அலி இப்னு ஸைதுப்னு ஜுத்ஆன்'' என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இந்தச் செய்தியை உறுதிப்படுத்தக்கூடிய வேறு எந்த வலுவான அறிவிப்பாளர் தொடர்களும் கிடைக்கவில்லை. எனவே, மக்கள் மத்தியில் இந்தப் பலவீனமான செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

ஷேக் அல்பானி (ரஹ்) போன்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் இது குறித்து விரிவான விளக்கங்களை வழங்கி, இது பலவீனமானது என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளார்கள்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →